பொன்னேரி: பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. ஈஸ்டர் பெருவிழா முடிந்ததும் வியாழக்கிழமை அன்னையின் விழாக்கொடி ஏற்றப்படும். 9 நாட்கள் நவநாட்கள் சிறப்பிக்கப்பட்டு 2 ஆம் சனிக்கிழமை தேர்பவனி நடைப்பெற்று ,ஞாயிறு ஆடம்பரத் திருப்பலியொடு முடிவடையும். மேலும் ஞாயிறன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி,மத இன வேறுபாடின்றி திருத்தலம்