துறையூர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துறையூர் நகர் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அவருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அதன்பின்பு மாலை வேளையில் வேட்பாளர் அருண் நேரு ஆதரித்து அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம் மேற்கொண்டார்.