மயிலாடுதுறை: வள்ளலார் கோவிலில் இருந்து மார்கழி மாத வீதி பஜனை நிகழ்ச்சியில், திருப்பாவை திருவெம்பாவை பாடியபடி கும்மி அடித்து, பரதநாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா டிரஸ்ட் மற்றும் மாயவரும் ராதா கல்யாணம் கமிட்டி நடத்திய மார்கழி மாத சங்கீர்த்தனம் எனப்படும் வீதி பஜனை சங்கீத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில், மாணவிகள் கிருஷ்ணர், ராதை, மீனாட்சி, சிவன், உள்ளிட்ட வேடங்களை அணிந்து பங்கேற்றனர். மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் தொடங்கிய வீதி பஜனை கோயில் வீதிகள், ஒத்த தெரு, காவிரி துலாக்கட்டம், இரட்டை தெரு வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியவாறும், கும்மிடியடித்தவாறும், பக்தி பா