Public App Logo
Profile Picture

villupuram news

@vpmnews
402Followers
1Following
விழுப்புரம் விக்கிரவாண்டி ஆற்றுப்பாலத்தில் லாரி விபத்து: ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி விக்கிரவாண்டி ஆற்றுப்பால தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், பூ வியாபாரியின் வாகனம் சேதமடைந்ததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vikravandi nis:value=Vikravandi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trichychennaihighway nis:value=TrichyChennaiHighway nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trafficalert nis:value=TrafficAlert nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadaccident nis:value=RoadAccident nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadunews nis:value=TamilNaduNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=villupuramnews nis:enabled=true nis:link/>
*விழுப்புரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்!

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான **கலைத்திருவிழா போட்டிகள்** விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

🎤 வில்லுப்பாட்டு
💃 பரதநாட்டியம்
🏺 களிமண் சிற்பம்
🏖️ மணல் சிற்பம்
💃 பிறவகை நடனம் உள்ளிட்ட **32 வகையான போட்டிகள்** நடைபெற்றன.

இதில் **101 பள்ளிகளைச் சேர்ந்த 567 மாணவ-மாணவிகள்** கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

➡️ திங்கட்கிழமை – விழுப்புரம் ஸ்ரீ காமகோடி உயர்நிலைப்பள்ளி
➡️ 25-ந் தேதி – விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

 ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு **பரிசு மற்றும் சான்றிதழ்** வழங்கப்பட உள்ளது.
 மேலும், ஒவ்வொரு பிரிவிலும் **முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்!**

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கலைத்திருவிழா nis:value=கலைத்திருவிழா nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பள்ளிமாணவர்கள் nis:value=பள்ளிமாணவர்கள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=schoolstudents nis:value=SchoolStudents nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kalaithiruvizha nis:value=Kalaithiruvizha nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
செஞ்சியில் தொடர் இருசக்கர வாகன திருட்டு!**
சிறுவன் உள்பட 4 பேர் கைது

செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், செஞ்சி–திருவண்ணாமலை புறவழிச்சாலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

👉 **13 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் + அவர்கள் பயன்படுத்திய 1 வாகனம் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல்!**

<nis:link nis:type=tag nis:id=செஞ்சி nis:value=செஞ்சி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=biketheft nis:value=BikeTheft nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vehicletheft nis:value=VehicleTheft nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=policeaction nis:value=PoliceAction nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=crimenews nis:value=CrimeNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
🚨 **விழுப்புரம் ரயில் நிலையத்தில் வழிகள் அடைப்பு – பயணிகள் அவதி!**

விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வழிகள் மூடப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

🚉 குறிப்பாக **3, 4, 5, 6-வது நடைமேடைகளை** பயன்படுத்தும் பயணிகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

👴 முதியவர்கள்
♿ மாற்றுத்திறனாளிகள்
👩 பெண்கள்
👶 குழந்தைகளுடன் வரும் பயணிகள்
🧳 அதிக உடைமைகளுடன் வரும் பயணிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஒரே வழியில் செல்ல வேண்டிய சூழலில் **கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.** ரயிலை பிடிக்க அவசரமாக வரும் பயணிகள், நடைமேடைகளில் இருந்து வெளியேறும் பயணிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர்.

📍 **தபால் நிலையம் அருகே இருந்த பயணிகள் பயன்பாட்டு வழி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.**

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வழி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், புதிய மேம்பால பணிகள் நிறைவடையும் வரை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்த வழியை **தற்காலிகமாக திறக்க வேண்டும்** என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

👉 தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தனிக்கவனம் செலுத்தி, பயணிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, விழுப்புரம் ரயில் பயணிகளின் சிரமத்திற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**மேம்பால பணிகள் முடியும் வரை தபால் நிலையம் அருகே உள்ள வழியை திறக்க வேண்டும் என்பதே பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.**

📸 **பயணிகளின் அவலநிலை – விழுப்புரம் ரயில் நிலையம்**

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramrailwaystation nis:value=VillupuramRailwayStation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=railwaystation nis:value=RailwayStation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=southernrailway nis:value=SouthernRailway nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trainpassengers nis:value=TrainPassengers nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பயணிகள் nis:value=பயணிகள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ரயில்வே nis:value=ரயில்வே nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=மேம்பாலம் nis:value=மேம்பாலம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பொதுமக்கள்கோரிக்கை nis:value=பொதுமக்கள்கோரிக்கை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
🚨 **விழுப்புரம் பகுதியில் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்!**

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அரசு டவுன் பஸ்களை நம்பி பயணம் செய்து வருகின்றனர்.

 ஆனால் காலை, மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால், அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் பஸ்சுக்குள் நிற்பதற்குக்கூட இடமின்றி, சில மாணவர்கள் **பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளை பிடித்தபடியும் ஆபத்தான பயணம்** மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆபத்தை உணராமல் சில மாணவர்கள் சாகசம் செய்வது போல் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் காட்சிகளும் தொடர்கின்றன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், இந்த நிலை முழுமையாக மாறவில்லை.

போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்** என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலை பள்ளி செல்லும் நேரத்திலும், மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் கிராமப்புற வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, **காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.**

⚠️ **மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?**

 **விழுப்புரம் மாவட்டம்**

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=மாணவர்கள் nis:value=மாணவர்கள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=அரசுபேருந்து nis:value=அரசுபேருந்து nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பஸ்பயணம் nis:value=பஸ்பயணம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பாதுகாப்பானபயணம் nis:value=பாதுகாப்பானபயணம் nis:enabled=true nis:link/>
**ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும்!**

**விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை**

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவதைப் போல, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

 வறட்சி காரணமாக குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்
 பழுதாகும் மின்மோட்டார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்
 வறட்சியை சமாளிக்க ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்
 டேங்க் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
 16-வது மானியக் குழுவுக்கான நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்
 வி.பி.ஜி. ராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும்

மேலும், **மக்களோடு மக்களாக பணியாற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்** என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ஊராட்சிமன்றதலைவர்கள் nis:value=ஊராட்சிமன்றதலைவர்கள் nis:enabled=true nis:link/>
விழுப்புரம் ரயில் நிலையத்தில் வழிகள் அடைப்பு: பயணிகள் அவதி

மேம்பால பணிகள் முடியும் வரை தபால் நிலையம் அருகே உள்ள வழியை திறக்க கோரிக்கை

விழுப்புரம்:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாலம் மற்றும் கட்டமைப்பு பணிகளால் பல்வேறு வழிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 3, 4, 5, 6-வது நடைமேடைகளுக்கு செல்லும் பயணிகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கியமான ரயில் சந்திப்பாக விளங்கி வருகிறது. மேலும், வடமாநிலங்களான மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும், சீரடி போன்ற முக்கிய ஆன்மிக தலங்களுக்கும் செல்லும் ரயில்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.

அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சுற்றுச்சுவர் பணியால் வழிகள் மூடல்

இந்த நிலையில், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த சில வழிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 3, 4, 5, 6-வது நடைமேடைகளில் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் வெளியே வருவதற்கும், அந்த நடைமேடைகளில் ரயில் ஏறச் செல்லும் பயணிகளும் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டர் வரை சுற்றிச்செல்லும் அவலம்

முன்பு ரயில் நிலையத்தில் இரண்டு மேம்பாலங்கள் மூலம் பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வந்தனர். தற்போது ஒரு மேம்பாலம் அகற்றப்பட்டு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் ஒரே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், ஒரே வழியாக அனைவரும் செல்ல வேண்டியிருப்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், சில நடைமேடைகளில் இருந்து வெளியே வருவதற்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அவதி

நீண்ட தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரயில் புறப்படும் நேரத்தை கருத்தில் கொண்டு அவசரமாக நிலையத்திற்கு வரும் பயணிகளும், நடைமேடைகளில் இருந்து வெளியே செல்ல வேண்டிய பயணிகளும் கூடுதல் நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ரயிலை தவறவிடும் சூழ்நிலையும் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

தபால் நிலையம் அருகே உள்ள வழி மூடல்

இதற்கு மாற்றாக, ரயில் நிலையத்தில் தபால் நிலையம் அருகே உள்ள வழி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

3, 4, 5, 6-வது நடைமேடைகளில் இருந்து ரயிலில் வந்து இறங்கும் பயணிகள், இந்த வழியை பயன்படுத்தி எளிதாக வெளியே செல்ல முடிந்ததாகவும், தற்போது அந்த வழி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் சிரமம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த வழி ஏன் மூடப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கில் வழி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழி மூடப்பட்டிருந்தாலும், தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இந்த வழியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

புதிய மேம்பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் வரை, தபால் நிலையம் அருகே உள்ள வழியை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், தேவையான இடங்களில் பாதுகாப்பு பணியாளர்களை நியமித்து, பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரயில் நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எம்.பி.க்கள் தனிக்கவனம் செலுத்த கோரிக்கை

இந்த பிரச்சினையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தனிக்கவனம் செலுத்தி, தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுப்புரம் ரயில் நிலைய பயணிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண குரல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேம்பால பணிகள் நிறைவடையும் வரை தபால் நிலையம் அருகே உள்ள வழியை பாதுகாப்புடன் திறந்து வைத்தால், 3 முதல் 6-வது நடைமேடைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். எனவே, தென்னக ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.<nis:link nis:type=tag nis:id=news32 nis:value=news32 nis:enabled=true nis:link/>
விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்சினை: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!**

விழுப்புரம் அடுத்த கோலியனூர் அருகே பனங்குப்பம் புதிய நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காலி குடங்கள் மற்றும் குடிநீர் தொட்டியுடன் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
💧 **“குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்”** என கோஷம் எழுப்பினர்.

இதனால் **விழுப்புரம்–புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.**

தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து காலை 10.30 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பனங்குப்பம் nis:value=பனங்குப்பம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=குடிநீர்பிரச்சினை nis:value=குடிநீர்பிரச்சினை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=சாலைமறியல் nis:value=சாலைமறியல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டிகள்!

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான **மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜூடோ போட்டிகள்** விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.

 மேலும், ஒவ்வொரு பிரிவிலும் **முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.**

📍 **விழுப்புரம் | TN32NEWS**

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ஜிம்னாஸ்டிக் nis:value=ஜிம்னாஸ்டிக் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ஜூடோ nis:value=ஜூடோ nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பள்ளிமாணவர்கள் nis:value=பள்ளிமாணவர்கள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விளையாட்டுபோட்டி nis:value=விளையாட்டுபோட்டி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/>
விழுப்புரத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் மீண்டும் செயல்படுமா?
பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், வடக்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் 24 மணி நேரமும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதால், புதிய பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் முன்பு செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த முன்பதிவு மையம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய புதுச்சேரி செல்லும் நிலை

முன்பதிவு மையம் செயல்படாததால், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நேரடியாக முன்பதிவு செய்ய விரும்பும் விழுப்புரம் பயணிகள், புதுச்சேரிக்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும், விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் பயணிகள் முன்பதிவு செய்வதால், தங்களுக்கு தேவையான நேரத்தில் இருக்கைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறையா?

முன்பதிவு மையம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் என கூறப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

24 மணி நேரமும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்லும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் முன்பதிவு மையம் இல்லாதது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

எனவே, தமிழக அரசும், சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையத்தை மீண்டும் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=tn32news nis:enabled=true nis:link/>
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனையில் அலட்சியமா? — நோயாளி குற்றச்சாட்டு; மாவட்ட நிர்வாகம் விசாரிக்க கோரிக்கை

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் நோயாளிகளுக்கு உரிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குவதில் அலட்சியம் காட்டப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காது கேட்கவில்லை என புகார்

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனக்கு காது சரியாக கேட்கவில்லை எனக் கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவரை அணுகியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கூறி அனுப்பியதாகவும், ஆனால் தனக்கு காது சரியாக கேட்கவில்லை என நோயாளி மீண்டும் தெரிவித்தபோதும், பிரச்சினை இல்லை எனக் கூறப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மரில் பரிசோதனை

இதையடுத்து அந்த நபர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சுமார் 40 சதவீதம் செவித்திறன் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அதற்கான சிகிச்சையை அவர் தொடர்ந்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நபருக்கு இரு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் மாறுபட்டதாக கூறப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் புகார்

இதுபோன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது கேளாமை, பார்வைக் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறன் தொடர்பான பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் உரிய முறையில் பரிசோதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சதவீதத்தை நிர்ணயித்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவதிலும் சில நேரங்களில் தேவையற்ற காலதாமதம் அல்லது அலட்சியம் காட்டப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உண்மையில் மாற்றுத்திறன் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உரிய பரிசோதனை அவசியம்

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடல்நிலையை முழுமையாக பரிசோதித்து, அவர்களுக்கு உள்ள குறைபாடுகள் உண்மையாக கண்டறியப்பட்டு, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையும் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு சிலரின் அலட்சியமான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் விசாரிக்க கோரிக்கை

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குற்றச்சாட்டுகள் உண்மை என விசாரணையில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பாரபட்சமின்றி உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்தம் இல்லாத இடத்தில் வாகனங்களுக்கு கட்டணம்?

ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம்:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடத்தில், ஒப்பந்தம் விடப்படாத பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்ததும் வலதுபுறத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடம் மட்டுமே வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவல் நிலையம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும், இன்னும் பயன்பாட்டுக்கு முழுமையாக திறக்கப்படாத பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் பயணிகளிடமும் சிலர் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அந்த இடத்திற்கு இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படாத நிலையில், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டணம் வசூலிக்கும்போது முறையான ரசீது வழங்கப்படாமல், போலியான பில் மூலம் வசூல் செய்யப்படுவதாகவும் சில வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த கட்டண வசூலில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக சில பொதுமக்கள் மற்றும் அங்கு வாகனங்களை நிறுத்தும் பயணிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சிலர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு வாகன நிறுத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, எந்தெந்த பகுதிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி உள்ளது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஒப்பந்தம் வழங்கப்படாத பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான அனுமதியின்றி கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து, பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தன் கால்வாய் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் பேசியதற்கு மறுப்பு!

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் நந்தன் கால்வாய் திட்டம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா பதில் அளித்தார்.

நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து விளக்கமளித்து, சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அன்னியூர் சிவா பேசினார்.

📍 நேரலை – விழுப்புரம் மாவட்டம்

<nis:link nis:type=tag nis:id=நந்தன்கால்வாய் nis:value=நந்தன்கால்வாய் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=அன்னியூர்சிவா nis:value=அன்னியூர்சிவா nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=சிவிசண்முகம் nis:value=சிவிசண்முகம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=மயிலம் nis:value=மயிலம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=live nis:value=Live nis:enabled=true nis:link/>
விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக பயிர் கடன், கரும்பு கடன் வழங்கக்கோரி போராட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடனை முழுமையாக செலுத்திய விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பயிர் கடன் மற்றும் கரும்பு கடன் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இதன் காரணமாக விழுப்புரம்–திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📍 விழுப்புரம் | TN32NEWS

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=farmersprotest nis:value=FarmersProtest nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விவசாயிகள் nis:value=விவசாயிகள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=சாலைமறியல் nis:value=சாலைமறியல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பயிர்கடன் nis:value=பயிர்கடன் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கரும்புகடன் nis:value=கரும்புகடன் nis:enabled=true nis:link/> #
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள்: டாஸ்மாக் ஊழியர்கள் 28-ந் தேதி வேலைநிறுத்தம்!**

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் **கு.பாலசுப்பிரமணியன்** கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கடைகளின் நிர்வாக பிரச்சினைகளையும் அரசு தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

**பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.**

📍 **விழுப்புரம் | TN32NEWS**

<nis:link nis:type=tag nis:id=tasmac nis:value=TASMAC nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=டாஸ்மாக் nis:value=டாஸ்மாக் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tasmacemployees nis:value=TASMACEmployees nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=டாஸ்மாக்ஊழியர்கள் nis:value=டாஸ்மாக்ஊழியர்கள் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=வேலைநிறுத்தம் nis:value=வேலைநிறுத்தம் nis:enabled=true nis:link/>
பாசம் இருந்தால்… பின்னால் வருவது நாய்தான்!  

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பானாம்பட்டு nis:value=பானாம்பட்டு nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பாசக்காரநாய் nis:value=பாசக்காரநாய் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=நன்றியுள்ளநாய் nis:value=நன்றியுள்ளநாய் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=செல்லப்பிராணி nis:value=செல்லப்பிராணி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=நாய்பாசம் nis:value=நாய்பாசம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=doglove nis:value=DogLove nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
**விழுப்புரத்தில் விதிமீறும் வாகனங்களுக்கு இனி தப்ப முடியாது!**  ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிரடி கண்காணிப்பு

மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் **61 இடங்கள்** கண்டறியப்பட்டு, அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் **ஜானகிபுரம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே** போக்குவரத்து போலீசார் ஸ்பீடு ரேடார் கன் மூலம் வாகனங்களின் வேகத்தை கண்காணித்தனர்.

🏍️ **அதிவேக வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம்**
🪖 **ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் ரூ.1,000 அபராதம்**

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்கள் நவீன சாதனம் மூலம் கண்டறியப்பட்டு, பதிவெண் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

⚠️ **வேகத்தை கட்டுப்படுத்துங்கள்... விதிகளை கடைபிடியுங்கள்... விபத்துகளை தவிர்ப்போம்!**

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trafficpolice nis:value=TrafficPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadsafety nis:value=RoadSafety nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=speedradar nis:value=SpeedRadar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trafficrules nis:value=TrafficRules nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadaccident nis:value=RoadAccident nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/>
100 நாள் ஆட்சி நிறைவு –   விக்கிரவாண்டி  த.வெ.க. சார்பில் சாதனை விளக்க நிகழ்ச்சி!

விக்கிரவாண்டி விழுப்புரம் தென்மேற்கு மாவட்டக் கழக செயலாளர் விஜய் வடிவேல் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல்வேறு அரசுத் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

மேலும், பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

100 நாள் ஆட்சி நிறைவை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

<nis:link nis:type=tag nis:id=tvk nis:value=TVK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=தமிழகவெற்றிக்கழகம் nis:value=தமிழகவெற்றிக்கழகம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tvk100days nis:value=TVK100Days nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ஜோசப்விஜய் nis:value=ஜோசப்விஜய் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விஜய்வடிவேல் nis:value=விஜய்வடிவேல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விக்கிரவாண்டி nis:value=விக்கிரவாண்டி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கஞ்சனூர் nis:value=கஞ்சனூர் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=100நாள்சாதனை nis:value=100நாள்சாதனை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
விழுப்புரத்தில் பஸ் நிறுத்த மேற்கூரைகளில் இரும்பு தகடுகள் திருட்டு

 வெயில், மழையில் பயணிகள் அவதி – இரும்பு திருடர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் நகர பகுதியில் சமீப காலமாக இரும்பு பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளில் உள்ள இரும்புத் தகடுகள் திருடப்பட்டு வருவதால், பயணிகள் மற்றும் மாணவிகள் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்பதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த **இரும்புத் தகடுகள் சில காணாமல் போயுள்ளன.**
இதனால் பஸ் வருவதற்காக காத்திருக்கும் மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு இடமின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஒரு பஸ் நிறுத்தத்தில் மட்டுமின்றி, விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களிலும் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்புத் தகடுகள் மற்றும் இரும்பு பொருட்கள் காணாமல் போவதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள **போலீஸ் தடுப்புகள் மற்றும் இரும்பு பேரிகார்டுகளும் திருடப்படுவதாக** பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் திருடப்படும் இரும்பு பொருட்களை சிலர் பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து பணமாக்குவதாகவும், குறிப்பாக மதுபோதைக்கு பணம் தேவைப்படுபவர்கள் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், பொதுச் சொத்துகள் சேதமடைவதுடன், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளும் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் நகரில் பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் உள்ள இரும்பு பொருட்கள் தொடர்ந்து காணாமல் போவதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், **பழைய இரும்பு பொருட்களை வாங்கும் கடைகளிலும் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு**, சந்தேகத்திற்கிடமான வகையில் கொண்டுவரப்படும் அரசு மற்றும் பொதுச்சொத்துகளை வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையே, தெய்வானை அம்மாள் கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் காணாமல் போன இரும்புத் தகடுகளை மீண்டும் பொருத்தி, மாணவிகள் மற்றும் பயணிகள் வெயில், மழையில் பாதுகாப்பாக நிற்கும் வகையில் மேற்கூரையை சீரமைக்க **நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்** என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படும் பஸ் நிறுத்தங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. <nis:link nis:type=tag nis:id=news32 nis:value=news32 nis:enabled=true nis:link/>
மாலை நேரத்தில் நிறுத்தப்படும் செல்லங்குப்பம் பேருந்து – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து காணை வழியாக செல்லங்குப்பம் பகுதிக்கு இயக்கப்படும் 28- என்ற எண் கொண்ட பேருந்து, தினமும் மாலை நேரத்தில் அகரசித்தாமூர் பகுதியில் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாழப்பட்டு, கெடார், செல்லங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து ஏன் வரவில்லை என போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டால், “பேருந்து பஞ்சர் ஆகிவிட்டது, கேஸ் லீக் ஆகிறது” உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பேருந்து சேவை இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் பேருந்து வசதி இல்லாமல் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, செல்லங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்படும் 28-ஆம் எண் பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாலை நேரத்தில் பேருந்து சேவை தடைபடுவதற்கான காரணத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். <nis:link nis:type=tag nis:id=news nis:value=news nis:enabled=true nis:link/> 32  <nis:link nis:type=tag nis:id=tn32villupuram nis:value=TN32VILLUPURAM nis:enabled=true nis:link/>
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகள்: கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம்:
விழுப்புரம் நகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான நான்குமுனை சந்திப்பில், பேருந்துகள் முறையாக நிறுத்தப்படாமல் சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுவதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், நான்குமுனை சந்திப்பை ஒட்டிய பகுதிகளில் பயணிகளை ஏற்றுவதற்காக சாலையிலேயே நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

காலை, மாலை நேரங்களில் நெரிசல்

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வதால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. அவசரமாக செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

பேருந்துகள் எந்த இடத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு பலகை இதுவரை வைக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலமுறை புகார்; நடவடிக்கை இல்லை?

இந்த பிரச்சினை குறித்து விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் பொதுமக்கள் கேட்டபோது, “விழுப்புரத்தில் 50 ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது; இதை எங்களால் மாற்ற முடியாது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரியே இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஏற்பாடு

இதற்கு முன்பு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய வசந்த், நான்குமுனை சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில், ஸ்டேட் வங்கி எதிரே பேருந்துகள் நிறுத்துவதற்காக தனி இடத்தை ஏற்படுத்தி, அங்கு மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அந்த ஏற்பாடு முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், தற்போது பேருந்துகள் மீண்டும் சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.பி. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எனவே, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் பேருந்துகள் நான்குமுனை சந்திப்பில் எந்த இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், பேருந்து நிறுத்தும் இடத்தில் அறிவிப்பு பலகை அமைத்து, சாலையில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நான்குமுனை சந்திப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<nis:link nis:type=tag nis:id=விழுப்புரத்தில் nis:value=விழுப்புரத்தில் nis:enabled=true nis:link/> தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்#

விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியில் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன் மற்றும் உதவியாளர் மனோஜ்குமார் ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிவிடுவது தொடர்பான தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது.

🪨 நடுரோட்டில் கற்களால் தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி **சாலை மறியலில் ஈடுபட்டனர்.**

இதனால் திருச்சி–சென்னை புறவழிச்சாலையில் சுமார் **1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு** ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.

📹 **தற்போது ஓட்டுநர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.**

⚠️ இதேபோல், ஒரு மாதத்திற்கு முன்பு இருவேல்பட்டு பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர் 3 பேரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

**தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?**

<nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=privatebus nis:value=PrivateBus nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=busdriver nis:value=BusDriver nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cctv nis:value=CCTV nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadrokko nis:value=RoadRokko nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=traffic nis:value=Traffic nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/>
🚨 விழுப்புரம் இந்திரா நகரில் பரபரப்பு!

வக்கீல் காளிதாஸ் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!

வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பெட்ரோல் குண்டு வீசியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴 மேலும் தகவல்கள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=இந்திராநகர் nis:value=இந்திராநகர் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=petrolbomb nis:value=PetrolBomb nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=policeinvestigation nis:value=PoliceInvestigation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>
பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்...

விக்கிரவாண்டி <nis:link nis:type=tag nis:id=முண்டியம்பாக்கம் nis:value=முண்டியம்பாக்கம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=பனையபுரம் nis:value=பனையபுரம் nis:enabled=true nis:link/>
சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்!
*விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்!

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.**

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது.

**உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” 

<nis:link nis:type=tag nis:id=சுதந்திரதினம் nis:value=சுதந்திரதினம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=மல்லர்கம்பம் nis:value=மல்லர்கம்பம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=தமிழர்பாரம்பரியம் nis:value=தமிழர்பாரம்பரியம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/>