விழுப்புரத்தில் பரபரப்பு! காரில் கடத்தி வரப்பட்ட 220 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - இருவர் அதிரடி கைது!
பெங்களூருவிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட, அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ குட்கா பொருட்களைத் தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்!
விழுப்புரம் செஞ்சி சாலை வழியாகப் புதுச்சேரிக்கு குட்கா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பாப்பான்குளம் பழைய செஞ்சி சாலை மேம்பால அருகே அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, 20 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது அம்பலமானது.
மகேஷ்குமார் (ராஜஸ்தான் மாநிலம்)
பரத் (பெங்களூரு)
220 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (மதிப்பு சுமார் ₹3,30,000)
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#News32 #ViluppuramNews