பூசாரியின் அராஜகம்? தேங்காய் உடைக்க ₹100 கட்டாய வசூல் – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதாந்திர அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்தனர்.
அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம், தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வதற்கு அங்குள்ள பூசாரி ஒருவர் கட்டாயப்படுத்தி 100 ரூபாய் காணிக்கை கேட்டு வாங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பக்தர், பூசாரியின் இந்தச் செயலைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இது போன்ற கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் பூசாரி மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Melmalayanur #AngalammanTemple #Villupuram #Chetpet #Gingee #HRCE #TempleIssue #ViralVideo #News32