"பள்ளிக்கு செல்ல பஸ் வேணும், சாலையை சீரமைக்கணும்" - கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் கண்ணீர் மனு!
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வானூர் தாலுகா முருக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில் மாணவர்கள் கூறியிருப்பதாவது: "நாங்கள் குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து சிறுநாவூர் செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. நாங்கள் இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. சைக்கிளில் செல்லும்போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. இதனால் பள்ளிக்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் காலதாமதமாகி விடுகிறது."
பள்ளி மாணவர்களின் இந்த நியாயமான கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32
👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்!
#Villupuram #Vanur #Murukkam #Kunnam #SchoolStudents #CollectorOffice #BusFacility #RoadIssue #News32 #TN32News #LocalNews