விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்: பரபரப்பு!
விழுப்புரம் அருகே உள்ள கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் அஞ்சலட்சம் (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நுழைவுவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த மனுவில் அஞ்சலட்சம் கூறியிருப்பதாவது: "எங்களுக்கு எந்தவித சொந்த வீட்டுமனைப் பட்டாவும் இல்லை. நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், மாதாந்திர வாடகை பணத்தைக் கூட செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்."
:
"எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருதி எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32
👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்!
#Villupuram #CollectorOffice #Dharna