பொன்னேரி: பழவேற்காடு கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாகவும் டிட்வா புயல் இன்னும் கரையை கடக்காத சூழலிலும் எட்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.5000க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரை நிறுத்தி வைத்தனர்,இதன் காரணமாக பழவேற்காடு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டன