துறையூர்: வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அறிவியல் திருவிழா 2024 கண்காட்சி நடைபெற்றது
வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அறிவியல் திருவிழா 2024 கண்காட்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வானதி வரவேற்றார். காவல் துறை ஆய்வாளர் குமரேசன் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.