துறையூர்: உப்பிலியபுரத்தில் ₹27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை MLA ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அன்பு நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்