*நடுவனந்தலில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு - போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை தொடக்கம்*
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பொதுமக்கள், பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த டாஸ்மாக் கடை அமாவாசையான இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீண்டும் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை முதலே கடை முன்பு கூட்டம் அலைமோதியது.