திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நாரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வினோத்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தமது சகோதரிக்கு வினோத் குமார் வீடியோ ஒன்றை அனுப்பி காணாமல் போன நிலையில் சீமாவரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அவர் உடல் சடலமாக கிடந்ததை போலீசார் கைப்பற்றி விசாரணை