சென்னை, அண்ணாநகர், தங்கம் காலனி பகுதியில் வசிக்கும் 24 வயது பெண் ஒருவர் தனியார் ஸ்கேன் சென்டரில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து இரவு திருமங்கலம், மெட்ரோ இரயில் நிலைய நடைபாதையில் இரயிலுக்காக காத்திருந்தபோது, அங்கு நின்றிருந்த சுமார் 60 வயது மதிக்கதக்க நபர் அப்பெண்ணை பார்த்து ஆபாசமான செய்கை காட்டியும், முத்தம் கொடுப்பது போல செய்கை காட்டியும், எங்கே செல்கிறாய் என கேட்டும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.