விருத்தாசலம்: விருதகிரிகுப்பத்தை ஊராட்சியாக அறிவிக்க கோரி அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக டிஜிட்டல் பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்
முதலை ஊராட்சியில் இருந்து விருத்தகிரி குப்பத்தை தனி ஊராட்சியாக பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி அப்பகுதி மக்கள் டிஜிட்டல் பேனர் வைத்து கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.7000 வாக்காளர்கள் உள்ள தங்கள் பகுதியில் கடந்த பல வருடமாக தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் குடிநீர் வசதி சாலை வசதி கழிவுநீர் அகற்றும் வசதி மின்விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரப்படாமல் உள்ள நிலையில் தனி ஊராட்சியாக பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்