மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரி நம்ம விழுப்புரம்!
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் உள்ள மரகதபுரம் கிராமத்தில், சாதி, மத எல்லைகளை உடைத்தெறியும் விதமாக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடிய வினோத தீமிதி திருவிழா ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!
விழாவின் நெகிழ்ச்சியூட்டும் சிறப்பம்சங்கள்:
🔹 ஒரே இடத்தில் வழிபாடு: மசூதிக்குள் முஸ்லிம் பெரியவர்களும், மாலை அணிந்த அய்யப்ப பக்தர்களும் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை, பாக்கு, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர்.
🔹 கைகோர்த்து தீமிதித்த அற்புதம்: நள்ளிரவில் மசூதிக்கு முன்பாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், முஸ்லிம் பெரியவர் ஒருவருடன் வலதுபுறம் இந்து மதத்தைச் சேர்ந்தவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும் கைகோர்த்தபடி இறங்கி வந்து மத நல்லிணக்கத்தை பறைசாற்றினர்.
🔹 10 நாள் கடுமையான விரதம்: சபரிமலைக்கு மாலை போடும் பக்தர்கள் போல, இரு மதத்தினரும் 10 நாட்கள் கடுமையான விரதமிருந்து இந்த தீமிதி விழாவில் பங்கேற்றுள்ளனர்.
🔹 வினோத நேர்த்திக்கடன்: குழந்தை பாக்கியம் இல்லாத இரு மதத்தைச் சேர்ந்த பெண்கள், ஈரச்சேலையுடன் மசூதி முன்பு மண்டியிட... முஸ்லிம் பெண் ஒருவர் தீக்குண்டத்து நெருப்பை ஜல்லிக்கரண்டியால் அள்ளி அவர்களின் முந்தானையில் போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய நெகிழ்ச்சியான காட்சி!
இந்த அதிசய விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரகதபுரத்தில் திரண்டனர்.
சாதி, மதம் கடந்து மனிதநேயமே பெரிது என்பதை உணர்த்திய மரகதபுரம் மக்களுக்கு நமது வாழ்த்துகளும் மரியாதைகளும்!
#VillupuramNews #Viluppuram #Marakathapuram #HinduMuslimUnity #MataNallinakkam #TheemithiThiruvizha #TamilNaduNews #BreakingNews #TrendingNews #News32 #TN32