விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த என்பவர் ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர்.