முசிறி: அழகாப்பட்டி பனந்தோப்பு பகுதியில் பாம்பு கடித்து சென்ட்ரிங் தொழிலாளி பலி
முசிறி அழகாகபட்டி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (38), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.