செங்கல்பட்டு: மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்றவர் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சிக்கியவர் யார் என்று விசாரணை நடத்திவருகின்றனர்.