பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நான்காவது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளராக திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து இன்று மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நான்காவது வார்டு மற்றும் 11 வது வார்டு பகுதியில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.