மட்டன் பிரியாணியில் வண்டுகள்! ஓட்டல் உரிமையாளருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
முண்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு – உணவின் தரம் கேள்விக்குறியாவதால் பொதுமக்கள் அச்சம்!
விழுப்புரம் - சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், முண்டியம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'யூசப் பிரியாணி' கடைக்கு இன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு குடும்பத்தினர் சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியைச் சாப்பிடத் தொடங்கிய போது, அதில் வண்டுகள் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர்.
?
இது குறித்து அந்த குடும்பத்தின் தலைவர் ஓட்டல் நிர்வாகத்திடம் உடனடியாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், ஓட்டல் தரப்பிலிருந்து எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. ஓட்டல் நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்களும், அங்கு திரண்ட பொதுமக்களும் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இது போன்ற பிரபல உணவகங்களில் கூட, சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த ஓட்டலில் உடனடியாக அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
#Villupuram #Mundiyampakkam #BiryaniIssue #FoodSafety #HotelIssue #PublicProtest #ViralNews #News32