4 ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு: மேல்காரணை கிராமத்தில் தவெக சார்பில் குடிநீர் விநியோகம் தொடக்கம்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல்காரணை கிராம மக்கள் தங்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து 6,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வழங்க மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஏற்பாடு செய்து, அப்பணியைத் தொடங்கி வைத்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், கிராம மக்கள் ஆர்வத்துடன் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். மக்களின் துயர்துடைத்த தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மேல்காரணை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
#Villupuram #VillupuramNews #Vikravandi #TVK #VijayVadivel #TVKVijay #Melkaranai #DrinkingWaterIssue #News32 #TN32News #TamilNaduNews