வேடசந்தூர் அருகே கலைஞர் நகர் பகுதியில் நேற்று இரவு எதிரெதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் வேடசந்தூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (வயது 80) என்பவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.