பண்ருட்டி: நேதாஜி நகர் அருகே கடலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்
அதிமுக - தேமுதிக இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றது. அதன்படி, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து வேட்பாளராக களம் காண்கின்றார். இதனையொட்டி கடலூர் - பண்ருட்டி சாலையில் நேதாஜி நகர் அருகே கடலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அதிமுக அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.