Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

#விழுப்புரம் | மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்புகளை உழுது அழிக்கும் அவலம்! கண்ணீரில் கரும்பு விவசாயிகள்! சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களைப் பொக்கோ போயிங் என்கிற மஞ்சள் நோய் தாக்கியதால் கரும்புகள் அனைத்தும் வளர்ச்சியின்றி காய்ந்து போயின. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்ட கரும்புகளைப் பெற செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வேறு வழியின்றி ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 5 ஏக்கர் கரும்புகளை விளைநிலத்திலேயே டிராக்டர் கொண்டு உழுது எருவாக மாற்றியுள்ளார். வேளாண் அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #Viluppuram #SugarcaneFarmers #AgricultureLoss #ViluppuramNews #FarmersIssue #PokkahBoeng #TN32NEWS

Viluppuram, Viluppuram | Jul 15, 2026

MORE NEWS

🔴 LIVE | நேரலை

🚨 விழுப்புரம் அரசியலில் பரபரப்பு!

விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கிய விஜியா சுரேஷ் பாபு, அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த குற்றச்சாட்டுகள் என்ன?
அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் என்ன?
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

📺 TN32 NEWS நேரலையில் முழு தகவல்கள்!

🗣️ உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

#LIVE #TN32NEWS #Villupuram #AIADMK #VijiyaSureshBabu #BreakingNews #TamilNews #ViluppuramPolitics #facebooklivestream

🔴 LIVE | நேரலை 🚨 விழுப்புரம் அரசியலில் பரபரப்பு! விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கிய விஜியா சுரேஷ் பாபு, அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு! இந்த குற்றச்சாட்டுகள் என்ன? அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 📺 TN32 NEWS நேரலையில் முழு தகவல்கள்! 🗣️ உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள். #LIVE #TN32NEWS #Villupuram #AIADMK #VijiyaSureshBabu #BreakingNews #TamilNews #ViluppuramPolitics #facebooklivestream

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

Viluppuram, Viluppuram | Jul 27, 2026

4 ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு: மேல்காரணை கிராமத்தில் தவெக சார்பில் குடிநீர் விநியோகம் தொடக்கம்! 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல்காரணை கிராம மக்கள் தங்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து 6,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வழங்க மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஏற்பாடு செய்து, அப்பணியைத் தொடங்கி வைத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், கிராம மக்கள் ஆர்வத்துடன் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். மக்களின் துயர்துடைத்த தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மேல்காரணை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

#Villupuram #VillupuramNews #Vikravandi #TVK #VijayVadivel #TVKVijay #Melkaranai #DrinkingWaterIssue #News32 #TN32News #TamilNaduNews

4 ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு: மேல்காரணை கிராமத்தில் தவெக சார்பில் குடிநீர் விநியோகம் தொடக்கம்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது! கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேல்காரணை கிராம மக்கள் தங்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு தவெக விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர். தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து 6,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வழங்க மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஏற்பாடு செய்து, அப்பணியைத் தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், கிராம மக்கள் ஆர்வத்துடன் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர். மக்களின் துயர்துடைத்த தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேலுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மேல்காரணை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். #Villupuram #VillupuramNews #Vikravandi #TVK #VijayVadivel #TVKVijay #Melkaranai #DrinkingWaterIssue #News32 #TN32News #TamilNaduNews

Viluppuram, Viluppuram | Jul 26, 2026

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது! 

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நடராஜன், சண்முகம் தலைமையிலான போலீசார் ஜி.ஆர்.பி. தெரு மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரைச் சோதனையிட்டதில், அவர்களிடம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி வம்பாபேட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (37), விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் (38) மற்றும் அவரது மனைவி மீனா (34) என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணசாமி கடத்தி வந்த மதுபாட்டில்களை, விழுப்புரத்தில் விற்பனை செய்வதற்காகச் சரண்ராஜ் மற்றும் மீனாவிடம் வழங்கியபோது போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

 800 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

#Villupuram #VillupuramNews #LiquorSmuggling #VillupuramPolice #News32 #TN32News #BreakingNews #CrimeNews #TamilNadu

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது! விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நடராஜன், சண்முகம் தலைமையிலான போலீசார் ஜி.ஆர்.பி. தெரு மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரைச் சோதனையிட்டதில், அவர்களிடம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி வம்பாபேட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (37), விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் (38) மற்றும் அவரது மனைவி மீனா (34) என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணசாமி கடத்தி வந்த மதுபாட்டில்களை, விழுப்புரத்தில் விற்பனை செய்வதற்காகச் சரண்ராஜ் மற்றும் மீனாவிடம் வழங்கியபோது போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். 800 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Villupuram #VillupuramNews #LiquorSmuggling #VillupuramPolice #News32 #TN32News #BreakingNews #CrimeNews #TamilNadu

Viluppuram, Viluppuram | Jul 26, 2026

நீட் தேர்வு முறைகேடு: விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி & SFI சார்பில் அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டம் – பரபரப்பு! 

போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகளை அமைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

#Villupuram #VillupuramNews #CPI #SFI #NEETIssue #DharmendraPradhan #VillupuramProtest #TamilNaduPolice #News32 #TN32News #BreakingNews #TamilNadu

நீட் தேர்வு முறைகேடு: விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி & SFI சார்பில் அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டம் – பரபரப்பு! போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகளை அமைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். #Villupuram #VillupuramNews #CPI #SFI #NEETIssue #DharmendraPradhan #VillupuramProtest #TamilNaduPolice #News32 #TN32News #BreakingNews #TamilNadu

Viluppuram, Viluppuram | Jul 26, 2026

#விழுப்புரம் | மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்புகளை உழுது அழிக்கும் அவலம்! கண்ணீரில் கரும்பு விவசாயிகள்! சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களைப் பொக்கோ போயிங் என்கிற மஞ்சள் நோய் தாக்கியதால் கரும்புகள் அனைத்தும் வளர்ச்சியின்றி காய்ந்து போயின. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்ட கரும்புகளைப் பெற செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வேறு வழியின்றி ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 5 ஏக்கர் கரும்புகளை விளைநிலத்திலேயே டிராக்டர் கொண்டு உழுது எருவாக மாற்றியுள்ளார். வேளாண் அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #Viluppuram #SugarcaneFarmers #AgricultureLoss #ViluppuramNews #FarmersIssue #PokkahBoeng #TN32NEWS - Viluppuram News