#விழுப்புரம் | மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்புகளை உழுது அழிக்கும் அவலம்! கண்ணீரில் கரும்பு விவசாயிகள்!
சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களைப் பொக்கோ போயிங் என்கிற மஞ்சள் நோய் தாக்கியதால் கரும்புகள் அனைத்தும் வளர்ச்சியின்றி காய்ந்து போயின. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பாதிக்கப்பட்ட கரும்புகளைப் பெற செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வேறு வழியின்றி ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 5 ஏக்கர் கரும்புகளை விளைநிலத்திலேயே டிராக்டர் கொண்டு உழுது எருவாக மாற்றியுள்ளார்.
வேளாண் அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#Viluppuram #SugarcaneFarmers #AgricultureLoss #ViluppuramNews #FarmersIssue #PokkahBoeng #TN32NEWS