தரங்கம்பாடி: வடகரை, அரங்கக்குடி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை, அரங்கக்குடி பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமியர்களிடம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதா, சால்வை அணிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.