இராமேஸ்வரம்: தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்சென்ற இலங்கை தமிழர்கள் மன்னாரில் கைது
மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் சென்ற போது இலங்கை மன்னார் கடற்பரப்பில் உள்ள மணல் திட்டில் வைத்து இலங்கை கடற்படையினர் இலங்கை தமிழர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த படகோட்டி என மொத்தம் ஆறு பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.