பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
33 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது பண்ருட்டி நகராட்சி. இங்கு நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் பிரீத்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளைக் கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.