விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர்.
இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்!
#TN32News #VillupuramNews #Viluppuram
Viluppuram, Viluppuram | Jul 27, 2026