யாசகம் எடுத்து ரூ.1.60 கோடி நன்கொடை!
விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ.10,000 வழங்கி நெகிழ வைத்த 77 வயது முதியவர்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 77 வயதான விவசாயத் தொழிலாளி பூல்பாண்டியன். மனைவி மறைவிற்குப் பிறகு, ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில வாரங்களாக விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுத்துச் சேர்த்த 10,000 ரூபாய் பணத்தை, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இதுவரை தமிழகம் முழுவதும் யாசகம் மூலம் திரட்டிய 1 கோடியே 60 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும், கல்வி உபகரணங்களாகவும் வழங்கியுள்ள இவர், விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை 5 முறை வந்து நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!
"குடும்பத்தினர் எதிர்த்தாலும், என் உயிர் உள்ளவரை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வேன்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த நிஜ மனிதநேய நாயகன்!
மேலும் செய்தி தகவல்களுக்கு TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்!
#TN32News #VillupuramNews #Viluppuram #SheikhAbdulRahmanIAS #Humanity #InspirationalStory #TamilNaduNews #CMReliefFund #VillupuramCollectorate