திருவள்ளூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று மதியம் 200 கன உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளது,ஏரிக்கு நீர் வரத்து 790 கன அடியாக வந்து கொண்டுருக்கிறது 35 அடியில் தற்போது 33.79 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது