நத்தம்: கரையூர் அருகே சாலையின் குறுக்கே வந்த 500KG உருவம் - கட்டுப்பாட்டை இழந்த டமால் என்று மோதிய கொடூர பின்னணி
செங்கல்பட்டு அழகப்பன் நகர் கிசூர் ஜெயகுமாரின் தங்கை வீணா லண்டனில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். மதுரையில் தோழிகளுடன் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்தவரை செங்கல்பட்டு அழைத்து செல்ல நண்பரின் காரில் வந்த கிசூர் ஜெயக்குமார் வீனாவை சொகுசு காரில் அழைத்து சென்ற போது நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை கரையூர் பிரிவு அருகே சாலையின் குறுக்கே சென்ற காட்டு மாடு மீது மோதியதில் காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் காரில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்