திண்டிவனத்தில் அதிரடி: போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது!
சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு, திண்டிவனம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 102 போதை மாத்திரைகள் (வலி நிவாரணிகள்), 9 சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களை திண்டிவனம் காவல் நிலைய போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் விவேகானந்தா நகர் பகுதியில் இந்த அதிரடி வேட்டையை நடத்தினர். கைது செய்யப்பட்ட சிவகுரு பிரசாத் (24), ஸ்ரீராம் (20), லோகேஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
#Tindivanam #VillupuramNews #PoliceArrest #TN32NewsMedia #BreakingNews #TamilNaduPolice