வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தம்பட்டியை சேர்ந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி மணிகண்டன் வயது 35 தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு வரும்பொழுது ஆறு பேர் கொண்ட மர்ம கொம்பல் அவரை தாக்கி உள்ளது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.