பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 4.30 மணிக்கு விளாபூஜையும் மற்றும் மாலை 4.00 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு மலைக்கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பிற்பகல் 2.00 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்பட்டு மாலை 6.00 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல அனுமதி அன்று ஒருநாள் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது