கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சி பகுதியில் திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானை வழிபட்ட திருத்தலமாக விளங்கும் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுந்தராம்பிகை அம்மனுக்கும் கச்சபேஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.