பண்ருட்டி: அருங்குணம் கிராமத்தில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்நிலையில், இன்று காலை வேலு விவசாய நிலத்திற்கு சென்று விட்டு திரும்பி பார்த்தபோது முத்துலட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த வேலு, இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேலுவின் மகன் மணிவாசகம் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.