குளித்தலை: கள்ளை ஆற்றுவாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல், 2 யூனிட் மண்ணுடன் லாரி பறிமுதல் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு
கள்ளை ஆற்று வாரியில் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்தியுள்ளனர். தகவல் அறிந்த தோகைமலை வருவாய் ஆய்வாளர் முத்து கண்ணன் மற்றும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு யூனிட் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்