தூத்துக்குடி: மீள விட்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு அஞ்சல் துறை சார்பில் 10 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது
மீளவிட்டானை சேர்ந்தவர் சரவணன், இவர் வேலை பார்த்த தனியார் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் இவருக்கு அஞ்சல் துறையின் போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ரூ.555க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்தது. இந்நிலையில் சரவணன் திடீரென்று சாலை விபத்தில் இறந்து விடவே அவரது குடும்பத்திற்கு அஞ்சல் துறையின் விபத்து காப்பீடு தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது.