திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே ஆடு வளர்க்கும் பட்டியில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது -90 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பெரியபள்ளப்பட்டி பகுதியில் ஆடு வளர்க்கும் பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தோமையார்புரத்தைச் சேர்ந்த சையது அபுதாகிர், பேகம்பூரை சேர்ந்த அஜிஸ்தாரிக் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 90 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை