குடியாத்தம்: 601 கிலோ உலர் பழங்களால் உருவான பிரம்மாண்ட லட்டு விநாயகர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில், உலர் பழங்கள் மற்றும் தானியங்களால் செய்யப்பட்ட 601 கிலோ லட்டு விநாயகர் சிலை பக்தர்களை கவர்ந்துள்ளது. பார்வதி தேவி விநாயகருக்கு ஊட்டுவது போன்ற இந்த தத்ரூபமான வடிவமைப்பை ஏராளமானோர் பார்த்து வணங்கி வருகின்றனர்.