விருத்தாசலம்: உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விருத்தாச்சலம் மாநில சாலை, பேரளையூர் பகுதியில் 750 மரக்கன்றுகள் நடப்பட்டது
விருத்தாசலம் வனத்துறை சார்பில் உலக வன நாளை முன்னிட்டு இந்த வருட கருத்துரு வனம் மற்றும் புதுமை - ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள் ஆகியவற்றின் படி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும், விருத்தாசலம், பேரளையூர், நேமம், வேப்பூர் அரசு பள்ளிகளில் 750 மரக்கன்றுகள் நடப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு, வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுதல் மற்றும் வன நாளின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது.