கடந்த 01.11.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த முத்து கல்யாணி, கடந்த 27.10.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி அழகேசபுரம் கண்ணபெருமாள் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் முருகன் (எ) ஸ்டீபன் ஆகிய 3 பேர் கைதானார்கள். இன்று மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.