Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
districtdm_1
விழுப்புரம்: திமுகவின் ஆ.ராசா சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்:- திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேட்டி.
Viluppuram, Viluppuram
| Jun 24, 2026
MORE NEWS
Viluppuram, Viluppuram | Jul 28, 2026
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர். இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்! #TN32News #VillupuramNews #Viluppuram
Viluppuram, Viluppuram | Jul 27, 2026
யாசகம் எடுத்து ரூ.1.60 கோடி நன்கொடை! விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ.10,000 வழங்கி நெகிழ வைத்த 77 வயது முதியவர்! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 77 வயதான விவசாயத் தொழிலாளி பூல்பாண்டியன். மனைவி மறைவிற்குப் பிறகு, ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார். அந்த வகையில், கடந்த சில வாரங்களாக விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுத்துச் சேர்த்த 10,000 ரூபாய் பணத்தை, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதுவரை தமிழகம் முழுவதும் யாசகம் மூலம் திரட்டிய 1 கோடியே 60 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும், கல்வி உபகரணங்களாகவும் வழங்கியுள்ள இவர், விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை 5 முறை வந்து நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது! "குடும்பத்தினர் எதிர்த்தாலும், என் உயிர் உள்ளவரை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வேன்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த நிஜ மனிதநேய நாயகன்! மேலும் செய்தி தகவல்களுக்கு TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்! #TN32News #VillupuramNews #Viluppuram #SheikhAbdulRahmanIAS #Humanity #InspirationalStory #TamilNaduNews #CMReliefFund #VillupuramCollectorate
Viluppuram, Viluppuram | Jul 27, 2026
🔴 LIVE | நேரலை 🚨 விழுப்புரம் அரசியலில் பரபரப்பு! விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கிய விஜியா சுரேஷ் பாபு, அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு! இந்த குற்றச்சாட்டுகள் என்ன? அரசியல் வட்டாரத்தில் இதன் தாக்கம் என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 📺 TN32 NEWS நேரலையில் முழு தகவல்கள்! 🗣️ உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள். #LIVE #TN32NEWS #Villupuram #AIADMK #VijiyaSureshBabu #BreakingNews #TamilNews #ViluppuramPolitics #facebooklivestream
Viluppuram, Viluppuram | Jul 27, 2026
Viluppuram, Viluppuram | Jul 27, 2026