திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விருவீடு சாந்திபுரம் பிரிவு அருகே பெட்டி கடையில் வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நிலக்கோட்டை, நடுகாட்டை சேர்ந்த முனியப்பன் மகன் சீனிவாசன்(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.