தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சார்ந்த கடற்கரை மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோன்றுகால் விளக்கு பகுதியில் வரும் பொழுது விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகிநர் இந்த விபத்து தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.