
விழுப்புரம் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு 🌾
விவசாயிகளுக்கு தரமான விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், சென்னை விதை ஆய்வு துணை இயக்குநர் வானதி தலைமையிலான சிறப்பு ஆய்வுக்குழுவினர் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
✅ மொத்தம் 38 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
✅ நெல், உளுந்து, கம்பு, வீரிய மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகள் உள்ளிட்ட 42 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
✅ விதைச்சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என பதிவேடுகள், கொள்முதல் ஆவணங்கள், விற்பனை ரசீதுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
🚫 விதைச்சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காத 2 விதை விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனைத் தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#விழுப்புரம் #விதைஆய்வு #விவசாயம் #SeedInspection #Villupuram #Farmers #Agriculture #TamilNadu