வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த 27ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் இருண்ட நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வந்தது இதன் காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சூரியன் தென்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி வரலாறு காணாத அளவில் கடும் குளிர் நிலவி வருகிறது.