திண்டுக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் 250 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தொழிற்சாலைகளில் ஏற்படும் கார்பன் டை ஆக்சைடுகளை கட்டுப்படுத்த கூடிய ஆலமரம், அரசமரம், பூவரச மரம், புங்கன் மரம், வாகை மரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த மரம் நடும் விழாவானது தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது