நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த லாரன்ஸ் டீக்கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு இவரது உறவினர செபாஸ்டின் ஜெயராஜ் இருவரும் நிலக்கோட்டை சாலை கோவில்மேடு சிவன் கோயில் அருகே, சமுதாயக்கூடத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செபஸ்டின் ஜெயராஜ், மது பாட்டிலை உடைத்து லாரன்ஸ் மீது பயங்கரமாக குத்தியதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்